Searching...
Sunday, February 9, 2014

மறைக்கப்பட்ட உண்மைகள்

Photo: இந்திய சுதந்திரப் போர் வரலாறு காலவரிசைப்படி ....   1498 - வாஸ்கோடகாமா இந்திய வருகை 1600 - இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி 1615 - ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை 1757 - பிளாசி யுத்தம் 1770 - வங்காளப் பஞ்சம், சன்னியாசி எழுச்சி 1779 - கட்டபொம்மன் தூக்கு 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும்,  1802-இல் ஓடாநிலையிலும்,  1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். 1805-மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்படல் 1806 - வேலூர் கோட்டை புரட்சி 1857 - இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி 1858 - பிரிட்டிஷாரின் நேரடி அதிகாரம் 1877 -விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டல் 1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம் 1905 - வங்காளப் பிரிவினை 1908 - திலகர், வ.உ.சி. கைது 1911 - ஆஷ் கொலை 1913 - கத்தர் கட்சி உதயம் 1914 - முதல் உலகப் போர் ஆரம்பம் 1915 - காந்தியின் இந்திய வருகை 1916 - கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல் 1918 - ரௌலட் சட்டம் 1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை 1920 - கிலாபாத்,ஒத்துழையாமை இயக்கம் துவக்கம் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உதயம் 1921 - மாப்ளர் எழுச்சி 1922 - சௌரி சௌரா மக்கள் எழுச்சி, ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்படல் 1925 - கான்பூர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு 1928 - சைமன் கமிஷன் வருகை 1929 - டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங்கின் குண்டு வீச்சு, லாகூர் காங்கிரஸில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம் 1930 - உப்பு சத்தியாக்கிரகம்,சட்டமறுப்பு இயக்கம், சிட்டகாங் புரட்சி 1931 - பகத்சிங் தூக்கிடப்படல்,இரண்டாம் வட்டமேஜை மாநாடு 1934 - அகில இந்திய கிஸான் சபை,அகில இந்திய மாணவர் சங்கம்,அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயம் 1937 - பார்வர்டு பிளாக் கட்சி உதயம் 1939 - இரண்டாம் உலகப் போர் துவக்கம் 1940 - தனிநபர் சத்தியாக்கிரகம் 1942 -வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 1943 - நேதாஜி இந்திய ராணுவம்அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல் 1946 - கப்பற்படை எழுச்சி 1947 - தேசப் பிரிவினை,இந்தியா சுதந்திரமடைதல் பாகிஸ்தான் உதயம்....
வீரத்தின் விளைநிலம்

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த
ஆங்கிலேய கிழக்கிந்தியக்
கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக
நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத்
தடுக்க வேண்டும்
என்று சின்னமலை விரும்பினார்.

இன்றைய கேரளத்திலும்
கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும்
இருந்த கிழக்கிந்திய
கம்பெனிப்படை ஒன்று சேர விடாமல்
இடையில் பெரும் தடையாகச்
சின்னமலை விளங்கினார்.

1801 -இல் ஈரோடு காவிரிக்கரையிலும்,
1802 -இல் ஓடாநிலையிலும்,
1804 -இல்
அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன்
நடைபெற்ற போர்களில்
சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

சின்னமலையின் ஓடாநிலைக்
கோட்டையைத் தகர்க்கக்
கள்ளிக்கோட்டை யிலிருந்து மிகப்பெரும்
அளவில் பீரங்கிப்படை வந்தது.
சுபேதார் வேலப்பன்
அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப்
பழனிமலைத் தொடரில் உள்ள
கருமலை சென்றார்.

போரில் சின்னமலையை வெல்ல
முடியாது என்று கண்ட ஆங்கிலேயர்
சூழ்ச்சி மூலம், சின்னமலையைக்
கைது செய்து சங்ககிரிக்
கோட்டைக்குக்
கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி
ஜூலை 31,1805
அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும்,
கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம்
எய்தினர்.

வீரர்கள் மற்றும் துரோகிகளால்
நிரம்பிக் கிடக்கிறது வரலாறு.

0 comments:

Post a Comment

 
Back to top!