கம்பங் காட்டு கொல்லையில
கண்மாயில காத்திருக்கேன்
சமயத்துல வருவியளா
சாதி சனம் வாரதுக்குள்ள
கஞ்சித் தண்ணி வெச்சுத் தாரேன்
கொஞ்சி கொஞ்சி ஊட்டித் தாரேன்
எஞ்சிப் போற கஞ்சித் தண்ணிய
வஞ்சி எனக்கு ஊட்டுவியளா
சோலியெல்லாம் செஞ்சுகிட்டு
சிரிச்சி சிரிச்சி பேசிக்கிடுவோம்
சாதி சனம் பாத்துபுட்டா
பாதியில ஒளிஞ்சிகிடுவோம்
கண்ணு பேசுற சேதியெல்லாம்
ஒண்ணு விடாத சேப்பியளா
கருக்கையில சனம் போன பொறவு
பொறுமையா காதுல பேசிக்கிடுவோம்
பம்புசெட்டு பக்கத்துல
வம்பாயிட்டு நிக்கிறதுகள
பம்மவைச்சு வெரட்டிடுவோம்
நம்ம கதைய வளத்துக்குவோம்
குளத்தங் கரையில பாத்துக்கிடுவோம்
களனியில திரிஞ்சுகிடுவோம்
ஆத்தோரமா நடந்துகிட்டே கருப்பு
காத்து படாம கட்டிக்கிடுவோம்
சத்தமிலாம ஒட்டிகிட்டு
முத்தமெலாம் கொடுத்துகிட்டு
காவாளிங்க வரதுக்குள்ள
கவனமா பிரிஞ்சுக்கிடுவோம்
காட்டுல நாம சுத்திக் கிடக்கையில
போட்டுக் கொடுத்தாய்ங்க களவாணிங்க
கறுவி கறுவி சனங்க செலது
அறுவாளத் தூக்கிட்டு அலயுதுங்க
மச்சான் நீங்க இருக்கயில
அச்சாரம் போடுதுங்க வீட்டில
கிறங்கி மயங்கி கெடக்குறன் நான்
உறக்கம் இல்லாத விசனத்துல
சேதி சொல்லி அனுப்புறேன்
கெதிகலங்கி போறதுக்குள்ள
காத்துக் கெடக்கேன் ஒங்களுக்கு
பத்திரமா வாரியளா
ஒத்தயடிக் கொல்லையில
செத்த நேரம் பேசிக்கிடுவோம்
பத்தவெச்ச கதைய பத்தி
பதவிசா முடிக்கிற சோலிய பத்தி.
பயப்படாத வீட்டுக்கு வாரிகளா
ஐயப்படாத கண்ணாலம் பேசுரிகளா
ஒங்களோட என்னய கூட்டிட்டுப் போறீகளா
ஒங்களுக்காக பொறந்து காத்துருக்கேன் நான்!
கண்மாயில காத்திருக்கேன்
சமயத்துல வருவியளா
சாதி சனம் வாரதுக்குள்ள
கஞ்சித் தண்ணி வெச்சுத் தாரேன்
கொஞ்சி கொஞ்சி ஊட்டித் தாரேன்
எஞ்சிப் போற கஞ்சித் தண்ணிய
வஞ்சி எனக்கு ஊட்டுவியளா
சோலியெல்லாம் செஞ்சுகிட்டு
சிரிச்சி சிரிச்சி பேசிக்கிடுவோம்
சாதி சனம் பாத்துபுட்டா
பாதியில ஒளிஞ்சிகிடுவோம்
கண்ணு பேசுற சேதியெல்லாம்
ஒண்ணு விடாத சேப்பியளா
கருக்கையில சனம் போன பொறவு
பொறுமையா காதுல பேசிக்கிடுவோம்
பம்புசெட்டு பக்கத்துல
வம்பாயிட்டு நிக்கிறதுகள
பம்மவைச்சு வெரட்டிடுவோம்
நம்ம கதைய வளத்துக்குவோம்
குளத்தங் கரையில பாத்துக்கிடுவோம்
களனியில திரிஞ்சுகிடுவோம்
ஆத்தோரமா நடந்துகிட்டே கருப்பு
காத்து படாம கட்டிக்கிடுவோம்
சத்தமிலாம ஒட்டிகிட்டு
முத்தமெலாம் கொடுத்துகிட்டு
காவாளிங்க வரதுக்குள்ள
கவனமா பிரிஞ்சுக்கிடுவோம்
காட்டுல நாம சுத்திக் கிடக்கையில
போட்டுக் கொடுத்தாய்ங்க களவாணிங்க
கறுவி கறுவி சனங்க செலது
அறுவாளத் தூக்கிட்டு அலயுதுங்க
மச்சான் நீங்க இருக்கயில
அச்சாரம் போடுதுங்க வீட்டில
கிறங்கி மயங்கி கெடக்குறன் நான்
உறக்கம் இல்லாத விசனத்துல
சேதி சொல்லி அனுப்புறேன்
கெதிகலங்கி போறதுக்குள்ள
காத்துக் கெடக்கேன் ஒங்களுக்கு
பத்திரமா வாரியளா
ஒத்தயடிக் கொல்லையில
செத்த நேரம் பேசிக்கிடுவோம்
பத்தவெச்ச கதைய பத்தி
பதவிசா முடிக்கிற சோலிய பத்தி.
பயப்படாத வீட்டுக்கு வாரிகளா
ஐயப்படாத கண்ணாலம் பேசுரிகளா
ஒங்களோட என்னய கூட்டிட்டுப் போறீகளா
ஒங்களுக்காக பொறந்து காத்துருக்கேன் நான்!
0 comments:
Post a Comment