Searching...
Friday, February 21, 2014

ராஜீவ் காந்தியால் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள்






ராஜீவ் காந்தியால் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன..*******************(1) நெல்லியடி முகாமை 1987 ஆடி ஐந்தில், கப்டன் மில்லர் தகர்த்து எறிந்து, நூற்றுக் கணக்கான சிங்கள இராணுவத்தினரை கொன்று குவித்தபின்னர்,தமிழ் ஈழப் பகுதிகள் அனைத்திலும் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்த ராணுவத்தினர் நடு நடுங்கினர்.படிப்படியாக புலிகள் ஒவ்வொரு முகாமையும் தகர்த்து அழிக்கவிருந்த வேளையில்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ராஜீவின் காலில் விழுந்துஒப்பந்தம் செய்து இலங்கைக்கு இந்தியப் படைகளை வரவழைத்தார்.இல்லையேல் 1990 கு முன்னரே தமிழ் ஈழம் நமக்கு கிடைத்திருக்கும் .நமக்கு அப்போது,அதற்கு விரோதியாக வந்தவர்தான் இந்த ராஜிவ்காந்தி!



(2)தியாக தீபம்,திலீபன் இந்தியச் செயல்களைக் கண்டித்து உண்ணாநோன்பு இருந்தபோது, திலீபனை அநியாயமாக சாகவிட்ட சண்டாளர்தான் ராஜீவ் காந்தி.



(3) குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 புலித் தளபதிகளை யுத்த நிறுத்தக் காலத்தில் சிங்கள ராணுவத்திடம் ராஜிவின் படைகள் ஒப்படைக்க இருந்ததால்தான் அவர்கள் சயனைட் உட்கொண்டு மடிந்தனர்.



(4)ராஜிவின் இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 8000..அதற்கு பொறுப்பு ராஜீவ்தான்.(5) ராஜிவின் கொலைவெறி,காமப் படையால் ஈழத்தில் மானபங்கப் படுத்தப் பட்ட ஈழத் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை,சுமார் 2000கு மேல்.அதற்கு காரணம் ராஜீவ்.



(6) இந்திய அமைதிப்படையால் கொள்ளை அடிக்கப் பட்ட ஈழத் தமிழர்களின் பணம்- சொத்து மதிப்பு சுமார் 1500கோடி ரூபாவுக்கு மேல்.



(7) இந்திய அமைதிப் படையால் அப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏதிலிகளாக ஆன தமிழர்களின் எண்ணிக்கை சுமார்20000 பேருக்கு மேல்.



(8) இந்திய அமைதிப் படையால்-அவர்களின் துப்பாக்கி குண்டுகளாலும் ,எறிகணைகளாலும், கை கால்களை,கண்களை,செவித்திறனை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000கு மேல்.அதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ்.



அன்பர்களே! இப்போது சொல்லுங்கள்..இத்தனைக்கும் காரணமாக இருந்த ராஜீவை எந்தக் கோர்ட்டில் நிறுத்தினார்கள்? யார் உரிய நடவடிக்கை எடுத்தார்கள்? நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானது..அதை அனைவரும் உணரவேண்டும்!குறிப்பாக  காங்கிரஸ்  இதை உணரவேண்டும்!

0 comments:

Post a Comment

 
Back to top!